நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ள இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார்.

ஏற்கனவே அனிருத் ரவிச்சந்தர் ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தின் மூலம் 3வது முறையாக இசையமைக்க உள்ளார். மேலும் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் கடைசியாக நடிகர் விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படம் எடுத்திருந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. அதனால் ‘ஜெயிலர்’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் தொடர்பான முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அங்கு சில நாட்கள் தங்கி படத்தின் பட பிடிப்பில் கலந்து கொள்வர் என கூறப்படுகிறது.