நடிகர் சூர்யா தற்போது ‘வணங்கான்’ மற்றும் ‘வாடிவாசல்’ படங்களில் கமிட் ஆகி உள்ளார். இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் தனது 42வது படத்தில் நடிக்க உள்ளார். முதல் முறையாக சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை அகரம் அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் போடப்பட்டு இருந்தது. இதில் நடிகர் சூர்யா பூஜை போடுவது போல் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.

சூர்யா கடைசியாக சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிறுத்தை சிவா கடைசியாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து எடுத்த ‘அண்ணாதே’ திரைப்படம் சரியான வரவேற்பை பெறாததால் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூரிய தனது சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது, உங்களுடைய ஆசிர்வாதம் அவசியம் என பதிவிட்டு உள்ளார். இப்படத்தின் படப்பிடு விரைவில் தொடங்க உள்ளது.