நடிகர் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் , ராஷ்மிக்கா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத் குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதேபோல் நடிகர் தனுஷ் ‘வாத்தி’ படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அல்லூரி இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திர கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் விஜய் அவர்கள் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து விசாகபட்டினத்திற்கு செல்லும் பொது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆனது. அதே போன்று ‘வாத்தி’ படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களுக்கு என சிக்கலென்று பாப்போம். தற்போது தெலுங்கு நடிகர்களின் சம்பளத்தி குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தும் படி கேட்டு உள்ளனர். ஆனால் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. கொரோனாவிற்கு பிறகு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே வருகின்றனர் அனால் தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க மாட்டிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை கடந்த 1ஆம் தேதி முதல் தெலுங்கு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. வாரிசு படம் தெலுங்கில் ‘வாரிசுடு’ என்றும் வாத்தி திரைப்படம் ‘சார்’ என்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. தயாரிப்பாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததால் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
