105 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி! – ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளது. குரூப்-எ அணியில் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் ஹாங்காங்க் அணிகள் உள்ளன. குரூப்-பி அணியில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. இன்று நடைப்பெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோதின.

afghanistan
Photo Credits : Crickbuzz

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்ததே ரன் குவிக்க திணறியது. முதல் 2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை இழந்தது. அதிகபட்சமாக பானுக ராஜபக்ஷே 38 ரன்களும் கருணாரத்னே 31 ரன்களும் எடுத்தனர். 20வது ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி.

team-afghanistan
Photo Credits : Crickbuzz

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பாசல்ஹக் ஃபருக்கி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பிறகு எளிய இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹசுறதுல்லாஹ் சாசாய் 37 ரன்களும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 41 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய பாசல்ஹக் ஃபருக்கி ஆட்ட நாயகன் விருத்தைப் பெற்றார்.

afghanistan
Photo Credits : Crickbuzz
Spread the Info

Leave a Comment