தமிழ் சினிமாவில் ‘ஆனந்தம்’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனர் லிங்குசாமி. அதன் பிறகு இவர் இயற்றிய ‘ரன்’, ‘சண்டக்கோழி’ ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

பிறகு அவர் எடுத்த ‘அஞ்சான்’ படம் தோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து பேசும் பொருளானர்.

இவர் கடைசியாக இயக்கிய ‘தி வாரியர்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இதைத் தொடர்ந்து ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த படத்திற்காக பிவிபி கேப்பிடல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார். மேலும் இக்கடனை திரும்ப செலுத்தவில்லை என பிவிபி கேப்பிடல்ஸ் தயாரிப்பு நிறுவனம் புகார் தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கு முடிவில் லிங்கு சாமி அவருக்கும் அவரது சகோதரர் சுபா சந்திரபோஸ் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்துள்ளது. இதனால் தமிழ் சினிமா துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.