புதுவிதமாக உருவாகி இருக்கும் பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் எப்படி உள்ளது?

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன், கலையரசன் மற்றும் ஷபீர் கல்லாரக்கல் ஆகியோர் நடித்து உள்ளனர். விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் மனோஜ் லியோனல் ஜேசன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்து உள்ளார்.

natchathiram-nagargirathu

பா.ரஞ்சித்தின் படம் என்றாலே கதை ஒரு தனி விதமாக இருக்கும். வழக்கம் போல இப்படமும் வித்யாசமான கதையில் அமைந்து உள்ளது. கலையரசன் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று புதுச்சேரி வருகிறார். அங்கு ஒரு நாடக கும்பலில் சேர்ந்து நடித்து வரும் பொது கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பிறகு அரசியல் சார்ந்த நாடகம் ஒன்றை திட்டமிடுகின்றனர்.

kalaiarasan
Kalaiarasan

இதற்கு இடையில் துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் காதலித்து பிரிகின்றனர. பிறகு என நடக்கிறது? நாடகம் எடுக்கப்பட்டதா? காளிதாஸ், கலையரசன், துஷார விஜயன் ஆகியோருக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும் இப்படத்தில் நிறைய கருத்துக்களை பா.ரஞ்சித் சொல்லியுள்ளார். ‘முற்போக்குத்தனம்’ , ‘ஆணாதிக்கம்’, ‘நாடக காதல்’, ‘LGBT’ ஆகியவற்றை பற்றி இப்படத்தின் கதை அமைத்து உள்ளது.

kalidas-jayaram-dushara-vijayan
kalidas-jayaram-dushara-vijayan

மேலும் காதலில் அரசியல், ஜாதி, மதம் ஆகியவை கலக்க கூடாது, இருவருக்கு பிடித்து இருந்தால் அவர்கள் இஷ்டம் போல வாழலாம் என்ற கருத்தை கூறியுள்ளார். மக்களிடம் இதைப்பற்றி கேட்கும் போது புதுவிதமாக கதை அமைந்து உள்ளது, மேலும் படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம் என கருத்து தெரிவித்து உள்ளனர்.

kalidas-jayaram-dushara-vijayan
kalidas-jayaram-dushara-vijayan
Spread the Info

Leave a Comment