சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி சரவணா அருள் நடித்து கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் ‘தி லெஜெண்ட்’. முதல் முறையாக தமிழ் சினிமாவில் சரவணன் அருள் நடித்த இவர் படத்தை இயக்குனர் ஜே-டி ஜெர்ரி இயக்கி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

பிரபு, யோகி பாபு, விஜயகுமார், நாசர் மற்றும் மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் விவேக் என ஒரு சினிமா பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர். மிக பிரம்மாண்டமாக உருவான இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று இப்படம் வந்து 25ஆவது நாளை கடந்து உள்ளது.

என்னதான் முன்னனி கதாநாயகர்களின் ‘விருமன்’ , ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்கள் வந்தாலும் இன்னும் சில திரை அரங்குகளில் இப்படம் ஓடி கொண்டுதான் இருக்கிறது. இதைத் தொடர்ந்து சரவணன் அருள் ட்வீட் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் “மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி” என 25வது நாள் போஸ்டரை பகிர்ந்து உள்ளார்.