கடந்த சில நாட்களாக இன்டர்நெட் மோகம் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகியுள்ளன. இதற்கு அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்களே என கூறலாம். முக்கிய பிரபலங்கள் இதை விளம்பர படுத்துவதால் நம்பி ஏமாற்றப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் நிறைய பணம் வேண்டும் என்கிற மனரீதியில் தள்ளப்படுகினற்னர்.

இதனால் பணம் அதிகம் இழப்பதனால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுக்க பல அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் ஏதும் செயல்படவில்லை என்பதே உண்மை. இன்று இதை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரமாக ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார்.

இதில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி . சைலேந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவ்ககள் வெளியாகி உள்ளது.