தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனராக கருதப்படுபவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் நெடுநாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம்-1 படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக நிறைவு அடைந்தது. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம் , சரத்குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளனர். மணிரத்னத்தின் படமான இப்படத்திற்கு வழக்கம் போல ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்து உள்ளார்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் டீஸர் ஜூலை-9 அன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமானது பாகுபலியின் சாதனையை மிஞ்சும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டும் என சினிமா வல்லுநர்கள் பலரால் கூறப்படுகிறது.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா கடந்த மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதைத் தொடர்ந்து நேற்று வெளியான தகவலின் படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் ட்ரைலரை மு.க.ஸ்டாலின் அவர்களே வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.