இந்தியாவின் 15வது ஜனாதிபதி தேர்தல் கடந்த 18ஆம் தேதி இந்தியா முழுதும் நடைப்பெற்றது. தற்போதைய ஜனாதிபதியான ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலமானது ஜூலை 24ஆம் தேதியுடன் முடியவிருக்கும் நிலையில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் நடைப்பெற்றது. தேர்தல் வேட்பாளர்களாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும் எதிர்கட்சியின் வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். திரௌபதி முர்முவுக்கு அதிமுக, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய காட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். வாக்குசீட்டு முறைப்படி இத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி பச்சை நிற வாக்குச்சீட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிங்க் நிற வாக்குச்சீட்டுகள் எம்.எல்.ஏகளுக்கும் கொடுக்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பிறகு வாக்குசீட்டுகள் டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் எடுத்துச் செல்லப்பட்டது. இதில் 99% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தன் வாக்கை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தனக்கான வாக்கை செலுத்தினர். மேலும் முக்கியத்தலைவர்கள் பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைப்பெற உள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் தேர்தல் அலுவலர் பி.சி.மூடியால் வெளியிடப்படும், மேலும் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? என்று அதிகாரப் பூர்வமாக இன்று வெளியாகும். இன்று தேர்ந்தெடுக்கப்படும் அடுத்த ஜனாதிபதி வரும் 25ஆம் தேதி பதவி ஏற்பார்.